உப்புக் கரிக்கும் மீனவர் வாழ்க்கை!
மப்றூக்
எங்களுரில் ஓர் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றைப் போல் இலங்கையில் எங்கும் இல்லை என்று எங்கள் பெரியப்பா ஒருவர் அடிக்கடி கூறுவார். ஊரின் வயிற்றுப் பகுதியால் வலமிருந்து இடமாகக் கிடையாக ஓடும் இந்த ஆறு, ஊரினது ஆரம்ப எல்லையில் தொடங்கி நிறைவூ எல்லையில் முடிவடைகிறது! இப்படி ஊரின் ஆரம்பம், முடிவை தனது எல்லையாகக் கொண்டோடும் ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை என்பதே பெரியப்பாவின் வாதமாகும்.
மாபெரும் கலாசார விழாவொன்றினை
வெற்றிகரமாகச் நடத்தி முடித்து விட்டு, தனக்கும் அதற்கும் சம்மந்தம் எதுவும் இல்லாதது மாதிரி அதற்கடுத்த நாட்களில் தனது அன்றாடக் காரியாலயக் கடமைகளில் மிகச்சாதராணமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் யூ.எல். நியாஸ்! விழா பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகம் சென்று செயலாளர் நியாஸின் அறைக் கதவைத் தட்ட, சிரித்த முகத்துடன் ‘வாங்க’ என்றார்!
சற்றே நளினத்துடனான முக மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்திப் பேசிக்கொண்டிருந்த ஒருவனை நண்பன் கேலியாக ‘பொன்ஸ்’ என்று பழித்தான்! நளினம் காட்டியவனும் விட்டபாடில்லை வேறோர் சொல் கொண்டு நண்பனுக்கு பதிலடித்தான்! (கவனிக்க: பதிலளித்தான் என்பதன் எழுத்துப் பிழையல்ல)

