மப்றூக்
வானொலியில் அறிவிப்பாளனாக வரவேண்டுமென்று நான் நிறையவே அலைந்திருக்கிறேன். கொழும்பில் வந்து நின்று பல நாள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். பஸ்சுக்கு காசில்லாமல் கொழும்பில் நடந்து திரிந்திருக்கின்றேன் – என்றெல்லாம் சிலரால் கூறப்படும் துயர் நிறைந்த அனுபவங்கள் போல எவையும் என்னிடமில்லை! நான் வானொலியில் சேர்ந்த கதையானது கண்மூடித்திறப்பதற்குள் நிகழும் மாயாஜாலம் போல் அதிசயமானதொன்று! அதை பிறகு சொல்கிறேன்.
சூரியன் எப்.எம். யில் நான் சேர்ந்து கொண்டபோது, அங்கிருந்த அறிவிப்பாளர்களில் அனேகமானவர்கள் வித்தியாசமான திறமைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். முதன் முதலாக உலக வர்த்தக மையத்தின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கோபுரத்தின் 35 ஆவது மாடியினுள் நுழைந்த போது நான் சுவாசித்த – காற்றை நறுமணப்படுத்தும் அந்த வாசம் இன்னும் என் ஞாபகங்களில் மிதக்கிறது.
அப்போது – என் ஆரம்ப நாட்களில் நான் ஒட்டிக் கொண்ட நண்பர்களில் வெள்ளையனும் முகுந்தனும் குறித்துச் சொல்லத்தக்கவர்கள். இருவரும் எனக்கு சிரேஷ்டமானோர். என்றாலும் நான் திறமைகளை வெளிப்படுத்தும் போது, மனம் நிறைந்து பாராட்டுவார்கள். என் பயிற்சிக் காலத்தின் போது அவர்களுடன்தான் அதிகமான நாட்களைக் கழித்திருக்கின்றேன். அவர்களுடன் இணைந்து ஒரு பயிற்சி அறிவிப்பாளனாக நிகழ்சிகளை வழங்கும் போது, அவர்களுக்கான சந்தர்ப்பங்களைக் கூட – எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அந்த நட்பு இப்போதும் தொடர்கிறது!
இன்னும் வாசிக்க….
து விரும்பும் போது ஒரு கைக்குட்டையைக் கம்பளமாகக் காட்டும். காட்டுத் தீயை, தீப் பொரியாகச் சுருக்கிச் சொல்லும்.
மப்றூக்


சூரியன் எப்.எம். இன் பத்தாவது ஆண்டு கடந்த. ஜுலை 25 ஆம் திகதி சிறப்பாகக்ண்டாடப்பட்டது!
சிந்தனையின் திட்டமிட்ட செயற்பாடுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டு வரும் காணி அபகரிப்பு, பசு கொல்லலுக்கான தடை மற்றும் பாங்கு சொல்வதற்கான ஒலித்தணிக்கைக் கட்டுப்பாடு ஆகியவைகளுக்கெதிராக நம்மவர்களில் எவரும் கவனமெடுத்துச் செயற்படவில்லை என்று மக்களின் ஆதங்கத்தினை எமது குறித்த அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம்! ஆனால், அந்தக் கட்டுரை இடம்பெற்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்களின் பின்னர் நமது முஸ்லிம் அரசியல் அரங்கில் மகிழ்சிகரமானதும், நம்பிக்கை தரக்கூடியதுமான சில நிகழ்வூகள் நடந்தேறியூள்ளன.
எங்களுரில் ஓர் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றைப் போல் இலங்கையில் எங்கும் இல்லை என்று எங்கள் பெரியப்பா ஒருவர் அடிக்கடி கூறுவார். ஊரின் வயிற்றுப் பகுதியால் வலமிருந்து இடமாகக் கிடையாக ஓடும் இந்த ஆறு, ஊரினது ஆரம்ப எல்லையில் தொடங்கி நிறைவூ எல்லையில் முடிவடைகிறது! இப்படி ஊரின் ஆரம்பம், முடிவை தனது எல்லையாகக் கொண்டோடும் ஆறு, இலங்கையில் எங்கும் இல்லை என்பதே பெரியப்பாவின் வாதமாகும்.


